At-Takwir

Change Language
Change Surah
Change Recitation

Tamil: Jan Turst Foundation

Play All
# Translation Ayah
1 சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது إِذَا الشَّمْسُ كُوِّرَتْ
2 நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது- وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ
3 மலைகள் பெயர்க்கப்படும் போது- وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ
4 சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது- وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ
5 காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது- وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ
6 கடல்கள் தீ மூட்டப்படும்போது- وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ
7 உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது- وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ
8 உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- وَإِذَا الْمَوْؤُودَةُ سُئِلَتْ
9 "எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று- بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ
10 பட்டோலைகள் விரிக்கப்படும் போது- وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ
11 வானம் அகற்றப்படும் போது- وَإِذَا السَّمَاء كُشِطَتْ
12 நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது- وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ
13 சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது- وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ
14 ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும். عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْ
15 எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக- فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ
16 முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்), الْجَوَارِ الْكُنَّسِ
17 பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும், وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ
18 மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக. وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ
19 நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும். إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
20 (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர். ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ
21 (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர். مُطَاعٍ ثَمَّ أَمِينٍ
22 மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ
23 அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ
24 மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ
25 அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல. وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ
26 எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்? فَأَيْنَ تَذْهَبُونَ
27 இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
28 உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்). لِمَن شَاء مِنكُمْ أَن يَسْتَقِيمَ
29 ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள். وَمَا تَشَاؤُونَ إِلَّا أَن يَشَاء اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
;