1 |
அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். |
/content/ayah/audio/hudhaify/083001.mp3
|
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ |
2 |
அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். |
/content/ayah/audio/hudhaify/083002.mp3
|
الَّذِينَ إِذَا اكْتَالُواْ عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ |
3 |
ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். |
/content/ayah/audio/hudhaify/083003.mp3
|
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ |
4 |
நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? |
/content/ayah/audio/hudhaify/083004.mp3
|
أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ |
5 |
மகத்தான ஒரு நாளுக்காக, |
/content/ayah/audio/hudhaify/083005.mp3
|
لِيَوْمٍ عَظِيمٍ |
6 |
அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்- |
/content/ayah/audio/hudhaify/083006.mp3
|
يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ |
7 |
ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது |
/content/ayah/audio/hudhaify/083007.mp3
|
كَلَّا إِنَّ كِتَابَ الفُجَّارِ لَفِي سِجِّينٍ |
8 |
'ஸிஜ்ஜீன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? |
/content/ayah/audio/hudhaify/083008.mp3
|
وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ |
9 |
அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும். |
/content/ayah/audio/hudhaify/083009.mp3
|
كِتَابٌ مَّرْقُومٌ |
10 |
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். |
/content/ayah/audio/hudhaify/083010.mp3
|
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ |
11 |
அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள். |
/content/ayah/audio/hudhaify/083011.mp3
|
الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ |
12 |
வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார். |
/content/ayah/audio/hudhaify/083012.mp3
|
وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ |
13 |
நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், "அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே" என்று கூறுகின்றான். |
/content/ayah/audio/hudhaify/083013.mp3
|
إِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ |
14 |
அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன. |
/content/ayah/audio/hudhaify/083014.mp3
|
كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ |
15 |
(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள். |
/content/ayah/audio/hudhaify/083015.mp3
|
كَلَّا إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ |
16 |
பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள். |
/content/ayah/audio/hudhaify/083016.mp3
|
ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا الْجَحِيمِ |
17 |
"எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது" என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும். |
/content/ayah/audio/hudhaify/083017.mp3
|
ثُمَّ يُقَالُ هَذَا الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ |
18 |
நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் "இல்லிய்யீ"னில் இருக்கிறது. |
/content/ayah/audio/hudhaify/083018.mp3
|
كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ |
19 |
"இல்லிய்யுன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? |
/content/ayah/audio/hudhaify/083019.mp3
|
وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ |
20 |
(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும். |
/content/ayah/audio/hudhaify/083020.mp3
|
كِتَابٌ مَّرْقُومٌ |
21 |
(அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள். |
/content/ayah/audio/hudhaify/083021.mp3
|
يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ |
22 |
நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) 'நயீம்' என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். |
/content/ayah/audio/hudhaify/083022.mp3
|
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ |
23 |
ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள். |
/content/ayah/audio/hudhaify/083023.mp3
|
عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ |
24 |
அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர். |
/content/ayah/audio/hudhaify/083024.mp3
|
تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ |
25 |
(பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். |
/content/ayah/audio/hudhaify/083025.mp3
|
يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ |
26 |
அதன் முத்திரை கஸ்தூரியாகும், எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும். |
/content/ayah/audio/hudhaify/083026.mp3
|
خِتَامُهُ مِسْكٌ وَفِي ذَلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ |
27 |
இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும். |
/content/ayah/audio/hudhaify/083027.mp3
|
وَمِزَاجُهُ مِن تَسْنِيمٍ |
28 |
அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள். |
/content/ayah/audio/hudhaify/083028.mp3
|
عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ |
29 |
நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள். |
/content/ayah/audio/hudhaify/083029.mp3
|
إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُواْ مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ |
30 |
அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள். |
/content/ayah/audio/hudhaify/083030.mp3
|
وَإِذَا مَرُّواْ بِهِمْ يَتَغَامَزُونَ |
31 |
இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள். |
/content/ayah/audio/hudhaify/083031.mp3
|
وَإِذَا انقَلَبُواْ إِلَى أَهْلِهِمُ انقَلَبُواْ فَكِهِينَ |
32 |
மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், "நிச்சமயாக இவர்களே வழி தவறியவர்கள்" என்றும் கூறுவார்கள். |
/content/ayah/audio/hudhaify/083032.mp3
|
وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاء لَضَالُّونَ |
33 |
(முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே! |
/content/ayah/audio/hudhaify/083033.mp3
|
وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ |
34 |
ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்து சிரிப்பார்கள். |
/content/ayah/audio/hudhaify/083034.mp3
|
فَالْيَوْمَ الَّذِينَ آمَنُواْ مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ |
35 |
ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள். |
/content/ayah/audio/hudhaify/083035.mp3
|
عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ |
36 |
காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.) |
/content/ayah/audio/hudhaify/083036.mp3
|
هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ |